tamilnadu

img

தென்சென்னையில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்!

சென்னை, மார்ச் 25 - தென்சென்னை மக்களவைத் தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தி யாசத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெறுவார் என்ற சாதனையை உருவாக்குவோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்தியா கூட்டணியின் சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக த. சுமதி (எ)தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இதனையொட்டி சைதாப்பேட்டையில் கூட்டணி கட்சிக ளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதன் சுருக்கம் வருமாறு: இந்தியா கூட்டணியில் கட்சிகள், இயக்கங்கள் என 36 அமைப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட் டணி துண்டு துண்டாக சிதறி கிடக்கி றது. அதிமுக அணியில் இருந்து பல அமைப்புகள் தற்போது இந்தியா கூட்ட ணியை ஆதரிக்கின்றன. தொகுதி ஒதுக்காத போதும் அணியில் இருந்து ஒரு அமைப்பு கூட விலகி செல்ல வில்லை. உச்சநீதிமன்றம் தினசரி ஒன்றிய அரசுக்கு எதிராக பேசுகிறது.

ஆனா லும் ஒன்றிய ஆட்சியாளர்கள் திருந்த வில்லை. மாநில அரசு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுக்கிறது. தமிழ கத்திற்கு எதிரானதாக ஒன்றிய அரசு உள்ளது. உச்சநீதிமன்றம் இதுவரை எந்த ஒரு ஆளுநரையும் இவ்வளவு கடுமையாக கண்டித்தது கிடை யாது. வீரவசனம் பேசிய ஆளுநர்,

இன்றைய தினம் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இரண்டு மாநிலங்களில் ஆளுந ராக இருந்தவருக்கு எதிராக தினசரி போராட்டம் நடந்து வந்தது. கடும் எதிர்ப்பால் வேலை செய்ய முடியா மல் ஓடி வந்துள்ளார். தென்சென்னை மக்களவைத் தொகுதி வரலாற்றில் கடந்த முறை அதிகபட்சமாக 2.62 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். இந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். தென்சென்னை உள்ளிட்டு 40 தொகுதிகளிலும் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.