பொள்ளாச்சி வழக்கில் வெற்றி; அனைத்து பெண்கள் கூட்டமைப்பு கொண்டாட்டம்
வந்த பாதையும் செல்ல வேண்டிய தொலைவும் என்ற தலைப்பில் சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் என்எப்ஐடபுள்யூ மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசுந்தரி தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை செயலாளர் பி.சுகந்தி, மாநில தலைவர் வாலண்டீனா, மாநில செயலாளர் ராதிகா, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பெண்கள் சங்கம் மாநிலச் செயலாளர் நிவேதா, பேராசிரியர் கல்பனா, கவிஞர் உமா சுப்பிரமணியன், மருத்துவர் சாந்தி (சமூக சமத்துவ மருத்துவர் சங்கம்), ஜாக்லின் (ஐசிடபுள்யூஎம்), மூத்த பத்திரிகையாளர்குமரேசன், லில்லி மேரி(சுயாட்சி இயக்கம்), கண்ணகி(என்எப்ஐ டபுள்யூ), ரமணி(தமிழ்நாடு பெண்கள் இயக்கம்), ஜெசிகா(எடிடிடபுள்ஐ), மெட்டில்டா (பிடபுள்யூஎஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.