சென்னை, ஜூலை 8- புதுக்கோட்டை மாவட் டம், வேங்கை வயல் கிரா மத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனி தக் கழிவு கலக்கப்பட்டது கடந்த 2022 டிசம்பர் 26 அன்று தெரியவந்தது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர் எம். சின்னதுரை அரசு அதிகாரிகளுடன் சம்பவ இட த்திற்கு சென்று ஆய்வு செய் தார். அதைத்தொடர்ந்து, இதுகுறித்து வெள்ளனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தர விட்டது. தொடர்ந்து சிபி சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி ராஜ்கமல் என்பவர் தொடர்ந்த வழக்கு திங்க ளன்று (ஜூலை 8) விசா ரணைக்கு வந்தது. அப்போது, “இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சந்தேக த்துக்குரிய மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது” என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, “புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதா ரங்கள் கிடைத்ததும் உடனடி யாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தமிழ்நாடு அரசு சார்பில் தெரி விக்கப்பட்டது.
இரு தரப்பு வாதத்தை யும் கேட்ட பொறுப்பு தலை மை நீதிபதி மகாதேவன், “2 ஆண்டுகள் ஆகியும் இது வரை ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்? மனி தாபிமானமற்ற முறையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர் பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. இரண்டு வாரங் களில் தீர்க்கமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண் டும்” என உத்தரவிட்டார்.