பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
வேலூர், ஜூன் 11- குடியாத்தம் அருகே 15 காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனைய டைந்துள்ளனர். வனத்துறையினர் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள ஆம்பூரான்பட்டி, சைனகுண்டா ஆகிய ஊர்களில் 15 காட்டுயானைகள் கூட்டமாக ஊருக்குள் வந்து பட்டாபி என்பவருக்கு சொந்தமான சாமந்தி பயிர்களை அழித்தது. அதேபோல் தேவராஜ், விநாயகம் ஆகியோரின் விளைநிலங்க ளில் பயிர் வைக்கப்பட்டிருந்த நெல், தக்காளி ஆகியவற்றை சேதப்ப டுத்தியதுடன், பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் பைப்புகளையும் உடைத்துள்ளன. பகல் நேரங்களிள் இந்த யானைகள் கூட்டம் வனப்பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்ப டுத்தி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனத்துறையினர் விரட்டும் போது இரண்டு குழுக்களாக பிரிந்து வன பகுதிகளில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குள் யானைகள் திரும்பி வந்து விடுகின்றன. இதனை வனத்துறையினர் முழுவதுமாக விரட்ட நடவ டிக்கை எடுத்து, விவசாயிகளையும், கிராம மக்களையும் பாதுகாக்க வேண்டுமெனவும், சேதப்படுத்திய பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவரிங் நகை அடகு வைத்து ரூ. 1 லட்சம் மோசடி
மரக்காணம், ஜூன் 11- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் அருகே நகை அடகுக் கடை நடத்தி வருபவர் சாமிநாதன் (40). இவர் சொந்த வேலையாக செவ்வாய்க்கிழமை கடையிலிருந்து வெளியே சென்றிருந்தார். கடையை அவரது மனைவி பூமதி (35) பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த ஒருவர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படு வதாகக் கூறி, அவா் அணிந்திருந்த 5 சவரன் செயினை கழட்டிக் கொடுத்துள் ளார், பூமதியும் செயினைப் பெற்றுக் கொண்டு 1 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த சாமிநாதன் அந்த நகையை பரிசோதித்த போது, அது கவரிங் நகை எனத் தெரிய வந்தது. இதுகுறித்து அவர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.