tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

அரக்கோணம் அருகே  மர அறுவை ஆலையில் இருந்த 14 கொத்தடிமைகள் மீட்பு 

வேலூர், ஜூலை 11- அரக்கோணம் அருகே மர அறுவை ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேரை வருவாய்த் துறையினர் மீட்டனர். பருவமேடு கிராமத்தில் உள்ள மர அறுவை ஆலையில் பலர் கொத்தடிமைகளாக இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சார்-ஆட்சியர் இளம்பகவத், அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார், மறுவாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் சம்பத் அடங்கிய குழுவினர் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ஆலையில் 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 6 குழந்தைகள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்தது. அவர்களை மீட்ட சார்-ஆட்சியர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 7 ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 14 பேரும் மீட்கப்பட்டனர்.

பெற்றோரால் கைவிடப்பட்ட இருளர் இன சிறுவர்கள் மீட்பு

வேலூர், ஜூலை 11- அரக்கோணம் அருகே மர அறுவை ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேரை வருவாய்த் துறையினர் மீட்டனர். பருவமேடு கிராமத்தில் உள்ள மர அறுவை ஆலையில் பலர் கொத்தடிமைகளாக இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சார்-ஆட்சியர் இளம்பகவத், அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார், மறுவாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் சம்பத் அடங்கிய குழுவினர் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ஆலையில் 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 6 குழந்தைகள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்தது. அவர்களை மீட்ட சார்-ஆட்சியர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 7 ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 14 பேரும் மீட்கப்பட்டனர்.

வேலூர் ஆவின் பொது மேலாளர் பணியிடை நீக்கம்

வேலூர், ஜூலை 11- வேலூர் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறை கேடுகள் தொடர்பாக அதன் பொது மேலாளர் கோதண்ட ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்த ரவை ஆவின் மேலாண் இயக்குநர் காமராஜ் பிறப்பித் துள்ளார். திருவண்ணாமலை ஆவின் உதவி பொது மேலாளர்  கணேசன், பொது மேலாளர் பொறுப்பை கூடுதலாக கவ னிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தி யாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான ஆவின் தலைமை அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் இரு மாவட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 5.16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படு கிறது. இதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள பாலில் 72 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டாகவும், நெய், பால் கோவா, மோர், லஸ்ஸி  உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பால் கொள்முதலில் தண்ணீர் கலந்து முறைகேடு செய்யப்பட்டிருப்பது அண்மையில் நடந்த தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஆவின் அதிகாரிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஆவின் பொது மேலாளர் கோதண்ட ராமனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆவின் மேலாண் இயக்குநர் காமராஜ் பிறப்பித்தார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.கோதண்டராமனுக்கு முன்பு பொது மேலாளராக இருந்த முரளிபிரசாத் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். முரளிபிரசாத் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக கோதண்டராமன் பணியில் சேர்ந்தார்.  தற்போது அவரும் அதேபோன்ற புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து திருவண்ணாமலை ஆவின் உதவி பொது மேலாளர் கணேசன்  பொது மேலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.