tamilnadu

img

பாஸ்டேக் முறையால் வாகனங்கள் அதிகநேரம் காத்திருப்பு

சென்னை,ஜன.19-  வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமை யாளர்கள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய பாஜக அரசு, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டண வசூலை அறிமுகப்படுத்தியது. இந்த முறையால் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அளந்துவிட்டது. ஆனால் பாஸ்டேக் முறையால் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் 29 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருக்கும் போது எரிபொருள் வீணா கிறது என்றும் இதனால் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்தது. இதனை தவிர்ப்பதற்கா கவும், ஆன்லைன் முறையில் கட்டணம் வசூலிக்க வசதியாகவும் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது. பாஸ்டேக் வசதி கொண்ட வாகனங் களில் பொருத்தப்பட்டிருக்கும் சிப்பை ஸ்கேன் செய்வதன் மூலம், டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வாகனம் கடந்து செல்ல விரைவாக அனுமதிக்கப்படுவதால் காத்திருக்கும் நேரம் குறையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக பாஸ்டேக் முறையால் காத்திருக்கும் நேரம் 29 சத வீதம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதுகுறித்து மத்திய சுங்கச் சாவடி போக்குவரத்துக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2019 நவம்பர் 15 முதல் டிசம்பர் 14 ஆம்  தேதி வரை, 488 சுங்கச்சாவடிகளில், வாகனம் ஒன்றுக்கு சராசரி காத்திருப்பு நேரம் 7 நிமிடங்கள் 44 விநாடிகளாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில் டிசம்பர் 15 முதல், 2020 ஜனவரி 14 வரை யிலான காலகட்டத்தில் சராசரி காத்திருப்பு நேரம் 9 நிமிடங்கள் 57 விநாடிகளாக அதி கரித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை யில் ஏற்படும் கோளாறுகளால் காத்திருப்பு நேரம் அதிகரித்திருப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

;