சென்னை, ஏப்.26- கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கோடைக்காலம் நெருங் கிய நிலையில், கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுகிறது. மேலும் பல இடங் களில் வெயில் சதமடித்து வருகிறது.
வெப்பம் அதி கரிப்பதால் தண்ணீரின்றி செடிகள், மரங்கள் என அனைத்தும் வாடுகின்றன. இதனால் விளைச்சல் குறைவதால் காய்கறிகளின் தட்டுப்பாடு அதிகமாகி விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினசரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்தி ரம், கர்நாடகம், மகாராஷ்டி ரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
ஆனால் அனைத்து இடங்ளிலும் வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்து, தற்போது வரத்து குறைந் துள்ளது. மேலும் கிடங்கு களில் சேமிக்கப்பட்டு வைத் திருக்கும் காய்கறிகளும் வெயிலால் வாடி வீணா கின்றன. இதனால் காய்கறி களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. கிலோ வுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160க்கும், எலுமிச்சை ரூ. 140க்கும், பட்டாணி ரூ.100க்கும், இஞ்சி ரூ.140க்கும், பூண்டு ரூ.150க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், ஊட்டி கேரட் ரூ.50க்கும், சேனைக்கிழங்கு ரூ. 68க்கும், வெள்ளரிக்காய் ரூ.30க்கும், பச்சை மிளகாய் ரூ.45க்கும், குடைமிளகாய் ரூ.50க்கும், வண்ண குடமிள காய் ரூ. 90க்கும் விற்பனை செய்யப்பட்டன.