tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வள்ளலார் சர்வதேச மைய
பணிகள் மீண்டும் துவங்கியது

கடலூர், ஏப்.21- கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ள லார் நிறுவிய சத்திய ஞான சபையில் 100  கோடி ரூபாய் மதிப்பீட் டில் வள்ளலார்  சர்வதேச மையம் அமைப்பதற்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்  காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு பணி  தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள்  தொடங்கப்பட்டு பள்ளம் தோண்டப் பட்டு வந்தது.

இந்த நிலையில், பாமக தூண்டுத லின் பேரில் பார்வதிபுரம் மக்கள், பள்ளத்  தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.இந்த நிலையில் தொடர் போராட்டம்  காரணமாக வள்ளலார் சர்வதேச மையம்  கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்  பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல்  நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை மீண்டும் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணிகள் தொடங்கி யது. காவல்துறையினரின் பாதுகாப்பு டன் கட்டுமான பணியில் தொழிலாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னைப் பல்கலை.யில் இலவசக் கல்வி திட்டம் 
விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை, ஏப்.21- சென்னைப் பல்கலைக்கழகம் சார்  பில் ‘இலவசக்கல்வி திட்டத் திற்கு’ விண்  ணப் பங்கள் வரவேற் கப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:“ஏழை மாணவர்கள்  இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்  பெறும் வகையில் இப்பல்கலைக்கழகம் 2010-11 ஆம் கல்வி ஆண்டு முதல் “சென்னைப் பல்கலைக்கழக இலவசக்  கல்வி திட்ட” ஒன்றை நடைமுறைப் படுத்தி வருகிறது.

வருகின்ற கல்வி ஆண்டில் (2024- 2025) இந்த இலவசக் கல்வி திட்டத்  தின்கீழ் சென்னைப் பல்கலைக்கழ கத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும்  அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இள நிலை படிப்புகளில் சேருவதற்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2023-2024 கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்பிற்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாண வர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்த வர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை  அளிக்கப்படும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கேரளாவில் பறவைக் காய்ச்சல்
தமிழகத்திற்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை; நோய் தடுப்பு நடவடிக்கை 

நீலகிரி,ஏப்.21- கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி  வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து  வரும் வாகனங்களில் தீவிர சோதனை  நடத்தப்பட்டு, கிருமி நாசினி தெளித்த பின்  அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல்  இருப்பதால் அந்த காய்ச்சல் தமிழகத்துக் குள் பரவுவதை தடுக்க தமிழக-கேரள  எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டம் தமிழக -கேரள எல்லையில்  இருப்பதால் இந்த பகுதியில் உள்ள சோத னைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவி ரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்  டத்தில் ஆனைக்கட்டி, முள்ளி, வேலந்  தாவளம், வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்பட 12 சோதனைச்சாவ டிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். அத்துடன் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறது. அதுபோன்று கேரளாவில் இருந்து பொருட்கள் ஏற்றி  வந்தால் அவை என்ன பொருட்கள் என்று  வாகனம் முழுவதுமாக சோதனை செய்  யப்படுகிறது. 

அதன்படி, கேரளத்தை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்து வக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

துணை ராணுவத்தினருக்கு  பிரியாணி விருந்து
திருத்தணி, ஏப்.21- தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடு பட்ட நூற்றுக்கணக்கான துணை ராணு வப் படையினருக்கு தமிழக காவல்துறை  சார்பில் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாத காலமாக துணை ராணுவப்படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருத்தணி காவல்துறையினர் சார்பில் அங்கு பணியில் இருந்த துணை ராணு வப்படையினருக்கு இந்த விருந்து வழங்  கப்பட்டது. கோழிக்கறி வறுவல், குழம்பு,  முட்டை மசாலா என பல்வேறு அசைவ  உணவுகள் பரிமாறப்பட்டன. விருந்து சிறப்பாக இருந்ததாக துணை ராணுவப் படையினர் தெரிவித்தனர்.