tamilnadu

வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வைரத்தேர் மா.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை : அமைச்சர் ஏற்பு

சென்னை,பிப்.22- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், அம்புக்கோவில் வீரமாகாளி யம்மன் கோவிலுக்கு வைரத்தேர் மற்றும் மரத் தேர்வு வழங்க வேண்டியதன் அவ சியம் குறித்து இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ மா.சின்னதுரை கடிதம் எழுதினார்.

இதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், புதுக்கோட்டை கறம்பக்குடி வட்டம், அம்புக்கோவில் வீரமாகாளியம்மன் கோவில் புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும்.

தற்போது பங்குனிதிருவிழாவின்போது கட்டுத் தேரில் அம்மாற் புறப்பாடு நடை பெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையின் கோரிக்கையை ஏற்று உடனடியாக வைரத்தேர் மற்றும் மரத்தேர் செய்வதற்கு மதிப்பீடுகள் தயார் செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்