காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தக் கூடாது, பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் நடராஜன், தலைவர் சந்திரன், பொருளாளர் தேவராஜ், வட்டச் செயலாளர் வெங்கேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.