tamilnadu

img

தோழர் ராமமூர்த்தி மறைந்தாலும் அவரது செயல்பாடுகள் என்றும் நினைவில் இருக்கும் படத்திறப்பு விழாவில் வே.மீனாட்சிசுந்தரம் புகழாரம்

சென்னை, மே 12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுப்பட்ட மேற்கு சென்னை பகுதி குழு, எழும்பூர் பகுதிக்குழு உறுப்பி னராக செயலாற்றிய தோழர் பி.ராம மூர்த்தி ஏப்.26 அன்று காலமானார். அவரது உருவப்படத் திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம் சனிக்கிழ மையன்று (மே 11) பெரியமேட்டில் நடைபெற்றது.

உருவப்படத்தை திறந்து வைத்து கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் பேசுகையில், “தோழர் ராமமூர்த்தி மறைந்தாலும் அவரது செயல்பாடுகள் மக்களின் நினைவில் என்றும் இருக்கும். பாட்டாளி மக்கள் விழிப்படைய அவரது குடும்பமே பாடுபட்டது. பெரிய மேடு பகுதியில் நடைபெற்ற போராட்டங்களை தொகுத்து நூலாக கொண்டு வர வேண்டும்” என்றார்.

களப்போராளி

கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகை யில், “கம்யூனிஸ்ட் மக்களோடு கலந்தி ருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மாக இருந்தவர் ராமமூர்த்தி. தன்னுடைய மனைவி ஆர்.சரளாவை முழுநேர ஊழியராக பணியாற்றி, மாநிலக்குழு உறுப்பினர் என்ற உயர் பொறுப்பிற்கு சென்ற பிறகும் அவர் தடையின்றி பணியாற்ற உதவி செய்தார். ஆணாதிக்க சமூகத்தில் இது சாதாரணமானது செயல் அல்ல. இங்குதான் ஒரு கம்யூனிஸ்டுகள் வேறு பட்டு உயர்ந்து நிற்கின்றனர்” என்றார்.

பெரியமேடு உள்ளிட்ட பகுதியில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், நியாய விலைக்கடை, பொதுக்கழிப்பிடம் கொண்டு வரவும் நடத்திய தொடர் போராட்டத்தையும், கட்சியை வளர்த்தெடுப்பதில் அவர் ஆற்றிய பங்கையும் தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியமேடு கிளைச் செயலாளர் த.மனோகரன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம் (வடசென்னை), இ.சர்வேசன் (மத்திய சென்னை), எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர்கள் எம்.எஸ்.மூர்த்தி (வடசென்னை), மு.சம்பத் (மத்திய சென்னை),  விசிக மாவட்டச் செயலாளர் சேத்பட் கோ.இளங்கோ, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் கே.தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.