மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வெ.இராஜசேகரன் - கோ.வெண்ணிலா ஆகியோரது மகன் முனைவர் ரா.அரவிந்த் - ப.வ.தேவிப்ரியா ஆகியோரது திருமணம் ஞாயிறன்று (மார்ச் 24) தாம்பரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த திருமணத்தை மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் நடத்தி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆ.மனோகரன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், என்.குணசேகரன், மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ப.சு.பாரதி அண்ணா (செங்கல்பட்டு), சி.சங்கர் (காஞ்சிபுரம்), முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் வெ.மன்னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.