tamilnadu

புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை அதிகரிப்பு

சென்னை, மே. 14-இந்தியாவில் புதிய வாகனத்தை விட பயன்படுத்திய கார்களின் சந்தை நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது.இந்தியன்பூளுபுக் இந்த சந்தைகுறித்து ஆய்வு நடத்தியது.2019 ஆம் நிதியாண்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை 40 லட்சத்தை தாண்டியுள்ளது. இது புதிய வாகனங்களின் விற்பனையை விட 1.2 மடங்கு அதிகமாகும். பயன்படுத்தப்பட்ட கார்சந்தை என்ற தலைப்பில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்  சரக்கு மற்றும் சேவைவரியானது 12 முதல் 18விழுக்காடாக மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு வரை தேக்கமாக இருந்தஇத்துறையில் தற்போதுமுதலீடுகள் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.கார்களை நிறுவனங்களில் வாங்குவது முதல்சில்லறைமுறையில் வாங்குவது வரை நல்லதாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் சந்தையில்ஏற்பட்ட மாற்றங்களை கூர்ந்து கவனித்தால், பயன்படுத்திய கார்களின் விற்பனையானது, 2011 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆண்டு வரை 10 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக அதிகரித்துள்ளது  வாகனத்தை வாங்குவதற்கு முன்பு 60 விழுக்காட்டினர் இணையத்தில் அலசி ஆராய்வதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.