tamilnadu

img

மோட்டார் வண்டி பராமரிப்பு ஊழியர் சங்க மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

சென்னை, ஏப். 28 - தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத்தின் 8வது மாநில மாநாடு செப்டம்பர் மாதம் 21ந் தேதி கோவையில் நடைபெறுகிறது. இதனையொட்டி 50 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்திற்கு கோவை கிளைத் தலைவர்ஏ.பஞ்சலிங்கம் தலைமை தாங்கினர். மாநிலத் தலைவர் எம்.வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே.புகழேந்தி, துணைத்தலைவர்கள் சி.முருகபெருமாள், செயலாளர் எஸ்.கோதண்டபாணி, செயற்குழு உறுப்பினர் என்.வெங்கடேஷ், கோவை கிளைச் செயலாளர் எஸ்.குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் வி.செந்தில்குமார், பொருளாளர் சி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.50 பேர் கொண்ட வரவேற்புக்குழுவின் தலைவராக வி.செந்தில்குமார், செயலாளராக ஏ.பஞ்சலிங்கம், பொருளாளராக டி.சிவம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;