சென்னை, ஜூலை 29- சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம் செய்வதில் மாநில அரசு அமைதியாக இருந்து தனது உரிமை பறி கொடுக்கக் கூடாது. கலை மற்றும் அறிவியல் கல்வியை காவிமயமாக்க அனு மதிக்கக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். துணைவேந்தர் ‘தேர்வுக்குழு’ தலைவராக மாணவர்கள் நலனில் அக்க றையே இல்லாத டெல்லி ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத் துணை வேந்தரை நியமித்து, தமிழ் நாட்டில் உள்ள கல்வியா ளர்கள் அவமரியாதை செய்யப்பட்டுள்ளனர். இப் பதவிக்கு விண்ணப்பித் துள்ள 177 பேரில் உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மட்டும் 30 பேர் விண் ணப்பித்துள்ளர். அதில் 12 பேரை மட்டும் இறுதிக்கட்ட நேர்காண லுக்கு அழைத்து நேர்காண லையும் காணொலிக் காட்சி மூலம் நடத்தி உள்ளனர்.
177 பேரில் எப்படி 12 பேரை மட்டும் நேர்காணலுக்கு அழைத்தார்கள்? எதனடிப்ப டையில் அழைக்கப்பட்டனர்? அவர்களில் பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, பட்டியலின, பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்பதை அறிவிக்க வேண்டும். சென்னை பல்கலைக் கழகத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த கல்வி யாளர் ஒருவரையே துணை வேந்தராக நியமிக்க வேண் டும், அண்ணா பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் அமைதி காத்தது போல், சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திலும் அமைதி காத்து மாநில அரசுக்கு உள்ள உரி மையை, அதிகாரத்தைப் பறி கொடுக்கக் கூடாது. கலை மற்றும் அறிவியல் கல்வி யைக் காவிமயமாக்கும் முயற்சியை அனுமதித்திடக் கூடாது. இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.