“கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து கண்ணீர்க் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனைப் பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்காதது அவர்களுக்கு இருப்பது இதயமா அல்லது கல்லா? என தெரியவில்லை. மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அவர் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவர் என முன்பு நினைத்திருந்தேன். ஆனால் அந்த கொஞ்சம் அளவுக்கு கூட விபரம் தெரியவில்லை என இப்போதுதான் தெரிகிறது” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் க. துரைமுருகன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.