சென்னை, ஜூலை 27- இளைஞர்களை வஞ் சித்த ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து ஜூலை 29 அன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடை பெறுகிறது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த் திக், மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாட்டு மக்களின் எந்த எதிர் பார்ப்புகளையும் பூர்த்தி செய் யாத ஒன்றிய பட்ஜெட் மக்க ளிடையே பெரும் கோப த்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பெரும் முதலாளி களுக்கு மிகப்பெரிய சலு கைகளை வாரி வழங்கி இருக் கிறது. நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு நாடு முழுவதும் பரவலாக நிதி ஒதுக்க வேண்டிய ஒன் றிய அரசு பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல மாநிலங்களை வஞ்சித் துள்ளது. குறிப்பாக தமிழ் நாடு, கேரளா போன்ற சமூக வளர்ச்சி குறியீட்டில் முன் னணியில் உள்ள மாநிலங்க ளுக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் பெரும் பாரபட்சம் காட்டப் பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மிகக் குறைவான நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
குறுகிய கால வேலை வாய்ப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் சுரண்டலுக்கு வழிவகுக்கும் திட்டங்களை அறிவித்துள்ள பட்ஜெட், இளைஞர்களுக்கு விரோத மானது. நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளை தருகிற விவ சாயத் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற வேலைவாய்ப்பு களை கடுமையாக பாதிக் கும். கல்விக்கும் இந்த பட் ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக் கப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்கல்விக்கு 17 சதவீதம் ஒதுக்கீடு குறைக்கப்பட்டு உள்ளது. கார்ப்பரேட் நிறு வன லாபம் மீது வரி விதித் திட வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்றப் படவே இல்லை.
அதைச் செய்யும் பொழுது அதிலிருந்து கிடைக்கும் நிதி மூலம் சாதாரண மக்க ளுக்கான நலத்திட்டங் களுக்கு கூடுதலாக செலவிட முடியும் . ஆனால் இவற்றில் கவனம் செலுத்தாத , இளை ஞர்கள் மற்றும் மக்கள் விரோத பட்ஜெட்டை கண் டிப்பதோடு , அதற்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று தமிழக இளைஞர் களை வாலிபர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. வரும் ஜூலை 29 அன்று தமிழ்நாடு முழுவதும் வாலிபர் சங்கம் நடத்தும் பட்ஜெட் எதிர்ப்பு போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டு கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.