tamilnadu

ஒன்றிய பாஜக அரசே, வக்பு திருத்த சட்டத்தை கைவிடுக!

ஒன்றிய பாஜக அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் 1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் மேற்கொள்ளும் திருத்தங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக ஒன்றிய அரசால் விவாதப் பொருளாக்கப்பட்டுள்ள வக்பு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. கடைசியாக திருத்தச் சட்டத்தை கூட்டு நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது என முடிவெடுத்துள்ளது.

தொடர்ந்து ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களை எதிரிகள் போல் சித்தரித்து அரசியல்  செய்து வருகிறது. கடந்த காலத்தில் பலதரப்பட்ட மக்களால் கோவில்களுக்கும், மசூதிகளுக்கும், தேவாலயங்களுக்கும் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை பராமரிப்பதற்கான நடைமுறை கள் அந்தந்த மத பிரிவின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியா வில் உள்ள முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கை அடிப்படையில் தானமாக பெறப்பட்ட சொத்துக்கள் முழுமையாக வக்பு வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலங்கள் மற்றும் அசையா சொத்துக் களை பல்வேறு பிரிவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை மாநில வக்பு வாரியங்கள் முறைப்படுத்தி வருகிறது. இதன் மீது எழக்கூடிய பிரச்சனைகள் ட்ரிப்யூனல் மூலமாகவும், நீதி மன்றங்கள் மூலமாகவும் தலையீடு செய்யப்பட்டு தீர்த்து வைக்கப்படுகின்றன. நடைமுறையில் உள்ள இந்த ஏற்பாடுகளை எல்லாம் கேள்விக் குறியாக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு திடீ ரென இதன் மீது சட்ட திருத்தங்களை மேற்கொள் வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

சுயாட்சித் தன்மையை சிதைப்பது

ஒரு மதப் பிரிவை சார்ந்த மக்களுக்கான சொத்துக்கள், அந்தந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு பரா மரிக்கப்பட்டு வருகிறது. அதை பல குழுக்களாக பிரிக்க வேண்டும் என்றும், மாற்று மதத்தினரை இந்த குழுக்களில் இணைக்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்த நிர்வாக ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் சுயாட்சித் தன்மையை சிதைப்பது, மாநில வக்பு வாரியங்களை ஒன்றிய வக்பு வாரியங் களோடு கலப்படம் செய்து பிரச்சனைகளை உருவாக்குவது உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த திருத்தங்களில் முன்மொழியப்பட்டுள்ளன. 

இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனி நபர் உரிமைக்கும், மதம் சார்ந்த உரிமை களுக்கும், இறையாண்மைக்கும் மதச்சார் பின்மைக்கும் பாதகமான சூழ்நிலைகளை உரு வாக்கும். ஒட்டுமொத்தத்தில் இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான முன் மொழிவு களாக அமைந்துள்ளது. 

சாதி, மதம், இனம், மொழி என பிரிந்து கிடக்கும் மக்கள் மத்தியில் மேலும் பிரிவினைகளை உருவாக்கும் ஆலோசனைகளை தான் இந்த சட்ட திருத்தத்தில் முன் மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அமைதியற்ற சூழலை இந்தியா எங்கும் உருவாக்குவதற்கு ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது.

விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும், ஒவ்வொரு அடுத்த கட்ட கல்வியில் நுழைவதற்காக நடைபெறுகிற குளறுபடிகளிலும் இந்திய தேசம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது, இதில் கவனம் செலுத்த வேண்டிய அரசு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சி எடுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்பதை  சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய கட மைகளை நிறைவேற்றுவதற்கு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாறாக மக்களை துண்டாடும் இது போன்ற நடவடிக்கைகளையும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள வக்பு திருத்தச் சட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, 
பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து