சென்னை, ஏப்.27- சென்னையில் மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட், கலங் கரை விளக்கம் – பூந்தமல்லி பணி மனை, மாதவரம் பால் பண்ணை – சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித் தடங்களில் சுமார் ரூ. 63 ஆயிரத்து 246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. உயர்மட்டப் பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலை யங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப் பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டத் திற்கு 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது, ஆர்டிஐ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2021 ஆகஸ்ட் 17 அன்று, பொது முதலீட்டு வாரியத்தால் பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மெட்ரோ ரயில் இரண் டாம் கட்டத் திட்டம் பரிந்துரை செய் யப்பட்டது. ஆனால் பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்து 3 ஆண்டுகளாகி யும் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக பிரதமரிடம் வலி யுறுத்தி வரும் நிலையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற் கான முன்மொழிவு அமைச்சரவை யின் ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது. பொதுவாக மெட்ரோ ரயில் திட்டம் மாநில - ஒன்றிய அரசின் 50 : 50 நிதிப் பங்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர வைக் குழுவின் ஒப்புதல் கிடைக்காத நிலையில் ஒன்றிய அரசு பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 ஆண்டுகளில் திட்டம் முடியவுள்ள நிலையில் இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் மாநில நிதியிலிருந்தே தமிழ்நாடு அரசு தற்போது செலவினங்களை மேற் கொண்டு வருகிறது.