சென்னை, அக். 17 - தினக்கூலி, தற்காலிக ஊழியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 19வது மாநாடு ஞாயிறன்று (அக்.16) சென்னையில் நடை பெற்றது. மாநாட்டில், பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், அகில இந்திய யூனியன் வங்கி ஊழியர் சம்மேளனத்துடன், நிர் வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தினக் கூலி மற்றும் தற்காலிக ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் டி.ரவிக்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் வரவேற்றார். அகில இந்திய சம்மேளனத் தின் பொதுச் செயலாளர் ஜகந்நாத் சக்கரவர்த்தி மாநாட்டை தொடங்கி வைத் தார். யூனியன் வங்கியின் பொது மேலாளர் விஸ்வேஸ் வரன், துணை பொது மேலாளர் செழியன், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் சி.பி.கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் என். ராஜகோபால், இந்திய வங்கி ஊழியர் அசோசியே ஷன் மாநில பொதுச் செயலாளர் சுனில் குமார், கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் இ.சர்வேசன் உள் ளிட்டு தோழமை சங்கத் தலைவர்கள் பேசினர். சங்கத்தின் தலைவராக டி.ரவிக்குமார், செயல் தலை வராக ஏ.ஆர்.பாஸ்கரன், பொதுச் செயலாளராக எம். ராஜசிம்மன், பொருளா ளராக முத்துசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.