tamilnadu

img

கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா தொற்று

தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை

சென்னை, மே 25- சென்னை மாநகராட்சியில் சுகாதார கட்ட மைப்பை வலுப்படுத்துவது, களப்பணி யாளர்களின் எண்ணிக்கையை அதிக ரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்க ளன்று (மே 25) சென்னை தலைமைச் செய லகத்தில் நடைபெற்றது சென்னையில் கொரானா தொற்று ஏற்  பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயி ரத்தை கடந்துள்ளது. சென்னையில் தொற்று  பரவலை கட்டுப்படுத்த 15 மண்டலங்க ளுக்கும் தனித்தனி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகள் அடங்கிய களப்பணிக் குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்க ளின் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த அதி காரி ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப் பட்டுள்ளார்.  இருப்பினும், சென்னையில் கொரோனா  தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சுகாதார கட்டமைப்பை வலுப்ப டுத்துவது, களப்பணியாளர்களின் எண்ணிக்  கையை அதிகரிப்பது, அதன் மூலம் கொரோனா பரவலை தடுப்பு குறித்து  இந்த  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் தலைமைச் செயலா ளர் கே.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, கொரனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.