தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்கிற அமைப்பு அரசு ஊழியர் களின் உரிமைகள் மற்றும் நலனுக்காக மட்டும் செயல்படுகிற ஒரு இயக்கம் என்ற ஒரு கருத்தியலைத் தாண்டி அது ஒரு சமூக இயக்கமாக தன்னை வரித்துக் கொண்டுள் ளது. பெண்கள் உரிமைகளுக்கான மாநாடு, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், நீட் தேர்வினால் நசுக்கப்படும் ஏழை மாண வர்களின் மருத்துவர் கனவுகள், புதிய கல்விக் கொள்கையினால் ஏற்படக்கூடிய சமூக அநீதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதகங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதி ரான போராட்டம், பண மதிப்புநீக்க நட வடிக்கைக்கு எதிரான போராட்டம், ஜிஎஸ்டிக்கு எதிரான போராட்டம், காவிரி ஆணையம் அமைக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் இயக்கம், உயர் மருத்துவக் கல்வியில் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணிபுரியும் மருத்துவ மாண வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான போராட்டம், செவிலியர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த போராட்டம், பெட்ரோல் டீசல் விலை யைக் குறைக்க போராட்டம் என பல தரப்பட்ட சமூகப் போராட்டங்களை முன்னின்று நடத்தி தன்னுடைய பங்களிப்பை இந்த இயக்கம் செய்து கொண்டு வருகிறது.
சமரசம் செய்து கொள்ளாத லட்சியம்
என்ன லட்சிய நோக்குடன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் துவங்கப்பட்டதோ அதற்காக 40 ஆண்டுகளாக, கொண்ட லட்சியத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தொடர்ந்து ஊழியர்கள் உரிமைக்காக போராடி வருகிறது. ஊழியர்களைக் காப்பதும், அவர்தம் உரிமை களைக் கேட்பதும், போராட்டங்களை முன்னெடுத்து அதிகார வர்க்கத்துக்கு எதிராக வாதாடுவதுமான நடவடிக்கைகளில் மற்ற இயக்கங்களை விட முன்னோடி இயக்கமாக இந்த இயக்கம் விளங்கி வருகிறது. அரசு ஊழியர்களின் பாதுகாப்பு கவசமாக, அர ணாக இன்று ஒரு பெரும் இயக்கமாக இச்சங்கம் விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் அதனைத் தோற்றுவித்த ஆசான் தோழர் எம்.ஆர். அப்பனும் அவர் வழிபற்றிய ஆளு மைத் தோழர்களின் அர்ப்பணிப்புச் செயல்பாடு களும், தொடர்ந்து நடத்திய போராட்டங்களும் விட்டுக்கொடுக்காத உரிமைகளும்தான்.
சங்கப் பொறுப்புகளில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைவிட பல பெரிய தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அமைப்பு விதிகளில் துணிச்சலாக மாற்றங் களைச் செய்வதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தனக்கு நிகர் தானாகத்தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இந்த மாணிக்க ஆண்டின் தொடக்கத்திலேயே சங்க நிர்வாகக்குழுவில் 33 சதவீதம் ஒதுக்கீடு செய்து காட்டியுள்ளது.
33 சதவீத மகளிருக்கான இட ஒதுக்கீடு முறையானது மாநில மையத்திற்கு மட்டுமல்ல, மாவட்ட அளவிலும் விரிவாக்கம் செய்யப் பட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம். வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடை பெறக்கூடிய நமது சங்கத்தின் மாணிக்க ஆண்டு நிறைவு மாநாட்டில் அதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்மூலம் இச்சங்கத்தை ஒரு மூன்றாம் தலைமுறையிடம் ஒப்படைக்கக் கூடிய பொறுப்பை இந்த தலைமை ஏற்று இருக்கிறது. அரசு ஊழியர் சமூகத்தில் இன்று ஏராளமான பெண்கள், இளம்பெண்கள் சுமார் 60லிருந்து 70 சதவீதம் வரை இருக்கிறார்கள்.
கடமைகளும் உரிமைகளும் வெறும் கோரிக்கைகளாலும் பிரதிநிதித்துவங்களாலும் மட்டுமே நம்முடைய உரிமைகள் கிடைத்து விடாது என்கிற நிதர்சன நிலையை அனைத்து மகளிர் ஊழியர்க்கும் உணர்த்துவதோடு மட்டு மல்ல; அவர்கள் அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து போராட்டக் களத்தில் இறங்கக் கூடிய நிலைக்கும் தங்களை தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும். பெரும்பான்மை பெண்கள் நடத்துகின்ற உரிமைக்கான போராட்டங்கள் ஒருபோதும் தோற்றதாக வரலாறு இல்லை. அதற்கான துவக்கப் புள்ளி மாநாடாக இந்த மகளிர் மாநில மாநாடு இருக்கும்.
சமவேலை, சம ஊதியம் இல்லை
உலக அளவில், வேலையிலும் சம்பளத்திலும் பெண்களின் நிலை அதிக முன்னேற்றம் அடையவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. உலக அளவில் பெண்கள் வேலைகளைப் பெறுவது முன்பு கருதப்பட்டதைவிட தற்போது கடினமாக ஆகியிருக்கிறது என்றும் வேலைச் சூழல், சம்பளம் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் இடைவெளி கடந்த இருபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.
வேலையின்மைக்கான தற்போதைய தகுதி நிபந்தனைகள், பெண்களை மிக அதிகமாக ஒதுக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் புதிய அளவுகோலின்படி ஆண்களைவிட வேலை கிடைப்பதில் பெண்கள் அதிகச் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
வீட்டில் பெண்களுக்கான உரிமைகள்
பெண்கள் உரிமைக்காக பல பேர் பேசி யிருந்தாலும் அவர்கள் வீட்டில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது. “உங்கள் மனைவிக்குச் சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தரு வீர்கள்?” என்று கேட்டு பாரதியாரின் பெண் விடுதலைப் பாடல்களுக்கு வித்திட்டவர் சகோதரி நிவேதிதா என்ற பெண் தான். அதற்குப் பிறகு தான் பாரதி பெண் விடுதலைக் கும்மி எழுதினான் என்பது வரலாறு.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரும் மிகச்சிறந்த சமூகப் போராளியுமான முத்துலட்சுமி ரெட்டி, சர்வதேச மகளிர் தினத்தை உலகம் அனுசரிக்க உழைத்த கிளாரா ஜெட்கின், மனித நேயம் மிக்க புரட்சியாளரும் தன் எழுத்துகளின் மூலம் மாற்றத்திற்கு வித்திட்டவருமான ரோசா லக்சம்பர்க், இவர்களைப் போன்ற இன்னும் எண்ணற்ற பெண்கள், இந்த சமூகம் வளர வும் பெண்களின் வாழ்வு மலரவும் உழைத்திருக் கின்றனர்.
“ஆண்கள் 8 மணிநேரம் அலுவலக வேலைபார்த்தால், பெண்கள் அதற்குப் பின்பும் வீட்டு வேலைகள், குழந்தைகள் படிப்பு என்று 13 மணி நேரம் சராசரியாக வேலை பார்க்கிறார்கள். இந்த உழைப்புச் சுரண்டலில் இருந்தெல்லாம் அவர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? யார் கொடுப்பார்கள்? மாதவிடாய் விடுப்பு, பெற்றோருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை, குழந்தை வேண்டும், வேண்டாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை, தனக்கு நடந்த பாலியல் வன்முறையை தன் குடும்பத்தில் வெளிப்படையாகப் பேசும் உரிமை, குடும்பத்தில் சம உரிமை, மரியாதை, தன் குணம் மற்றவர்களால் மதிப்பீடு செய்யப் படுவதிலிருந்து விடுதலை எனப் பல விஷ யங்களில் பெண்களுக்கான உரிமைகள் காலம் காலமாக மறுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அவர்களுக்கு பெற்றுத் தருவது தான் அறிவார்ந்த ஆண் சமுதாயத்தின் பணியாக இருக்க வேண்டும், இருக்க முடியும்.
மகளிர் மாநாட்டின் லட்சியம்
மேலே குறிப்பிட்ட கோபங்கள், ஏக்கங்கள், கேள்விகள், வருத்தங்கள் 90 சதவீதம் பெண்களுக்கும் உரியவைதான். அதை நம் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு, சமூகத்திற்கு, நாட்டுக்கு இந்த சர்வதேச மகளிர் தினத்தில் உணர வைப்போம். இந்த நாளில் துவங்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் மாநில மாநாடு அதற்கான வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.