tamilnadu

img

‘மிஸ்டர் 29 பைசா’ பிரதமர் மோடிக்கு புதிய பெயர் வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, மார்ச் 27 - பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பெயர் ‘ மிஸ்டர் 29 பைசா’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து கடந்த 5 நாட்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு தொகுதி களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிய இந்த பிரச்சாரக் கூட்டங் களில் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகங்களையும், தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜகவுடன் கூட்டு சேர்ந்து அதிமுக இழைத்த துரோகங்களையும் பட்டியலிட்டு சாடினார்.

செவ்வாய், புதன்கிழமைகளில் திருவண்ணா மலை, வேலூர், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் பல்வேறு மையங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உற்சாக வரவேற்புடன் கூடிய பிரச்சாரக் கூட்டங்களில்  உதயநிதி உரையாற்றினார். 

நேரத்திற்கு தகுந்தாற்போல பேசும் எடப்பாடியல்ல, நான்!
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிய கல்லை நான் காண்பித்தேன். இதற்கு  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்கிரிப்ட்டை மாற்றிப் பேச வேண்டும் என் கிறார். நானாவது கல்லைத்தான் காண்பித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும்  போது ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டிருக் கிறார் பாருங்கள் என்று, பழனிச்சாமி நரேந்திர மோடியுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்தார்.

உங்களைப் போன்று (எடப்பாடி) நேரத்திற்கு தகுந்தாற்போல் ஆட்களுக்குத் தகுந்தாற் போல் ஸ்கிரிப்ட் வைத்துப் பேசுபவன் நான் அல்ல என்றும் தமிழ்நாட்டிற்கான மாநில உரிமைகளை அடகு வைத்த கூட்டம்தான் அதிமுக கூட்டம் என்றும் கடுமையாக சாடினார்.

10 நாள் தங்கினாலும் ஒரு இடம் கூட கிடைக்காது
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 10 நாள் அல்ல, எத்தனை நாள் சுற்றி வந்தாலும், தமிழ்நாட்டி லேயே தங்கி இருந்தாலும் கூட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒரு ரூபாய் தமிழ்நாட்டு மக்கள் வரியாகக் கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்குத் திருப்பி தருகிறார்கள். அதனால்தான் ‘மிஸ்டர் 29 பைசா’  என்று பிரதமர் மோடிக்கு புதிய பெயர் வைத்துள்ளேன்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு நிதி எனும் ஆக்சிஜனை நிறுத்தி, வளர்ச்சியைத் தடுக்கும் ஜனநாயக விரோதிகளை வீட்டுக்கு அனுப்ப நம் சமூக நீதி மண்ணிலிருந்து உறுதி ஏற்போம். பாசிச பாஜகவுக்கு பாடம் புகட்டக் கூடிய தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல்  இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள தான் ஆளுநர்
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய இடங்களில் நடந்த பிரச்சாரங்களில் தொடர் ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ரவி என்றும் வின்னர் திரைப்படத்தில் வரும் கைப்புள்ள கதாபாத்திரம் போன்றவர் என்றும் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைப்பதைத் தடுக்கவும் முயற்சித்தவர் என்றும் கடுமையாக சாடினார்.