tamilnadu

img

வில்லிவாக்கம், ராயபேட்டையில் பன்னோக்கு மருத்துவமனை

சென்னை, ஏப். 2 -
வில்லிவாக்கத்தில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு புரசை வாக்கம், நுங்கம்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  துறைமுகம் தொகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பி.கே.என். கார்டனில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி சாலை, பிரகாசம் சாலை, எஸ்பிள னேடு ரூ. 13 கோடி மதிப்பீட்டில்  மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட் டுள்ளது. ரூ. 8.41 மதிப்பீட்டில் துறை முகம் பகுதியில் சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளது. வால்டாக்ஸ் சாலையில் ரூ. 1.50  கோடி மதிப்பீட்டில் சமூக நலக்கூடம்  கட்டப்பட்டு வருகிறது. கே.பி.பார்க்கில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  துறைமுகம் தொகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பி.கே.என். கார்டனில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி சாலை, பிரகாசம் சாலை, எஸ்பிள னேடு ரூ. 13 கோடி மதிப்பீட்டில்  மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட் டுள்ளது. ரூ. 8.41 மதிப்பீட்டில் துறை முகம் பகுதியில் சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளது. வால்டாக்ஸ் சாலையில் ரூ. 1.50  கோடி மதிப்பீட்டில் சமூக நலக்கூடம்  கட்டப்பட்டு வருகிறது. கே.பி.பார்க்கில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தலுக்கு பிறகு, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட துறைமுகம் பகுதியில் துணை மின்நிலையமும், கழிவு நீரேற்று நிலையமும் அமைக்கப்படும். 95வது வட்டம், வில்லிவாக்கம் கிழக்குமாட  வீதியில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள  மருத்துவமனை இடித்துவிட்டு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப் படும். அயனாவரம், பார்த்தசாரதி புரம், பி.பி.கார்ட்ன் உள்ளிட்ட பகுதிகளில் 7 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய்  அமைக்கப்படும். பெல்ட் ஏரியாவில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க  அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை பெற்று அனை வருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நுங்கம்பாக்கம்
ஆவடி விநாயகர் கோவில் தெருவில் நீண்டகாலமாக மாற்றப்படாமல் இருந்த  கழிவுநீர், குடிநீர் குழாய்கள் ரூ. 56 லட்சம்  மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப்பட்டது. பார்த்தசாரதி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் கட்டணமில்லா வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கடல் வரை செல்ல நடை பாதை அமைக்கப்பட்டது. அண்ணாநகர் தொகுதியில் உள்ள 8 சென்னை பள்ளி களுக்கு குடிநீர் சுத்தகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 107, 101 வார்டுகளில் புதிய நியாய விலைக் கடை, உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு 109 தெருக்களில், 52.69 கோடி செலவில் கழிவுநீர் கட்டமைப்பு கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம் பகுப்பாய்வு மையம் சீர மைக்கப்பட்டுள்ளது. அண்ணா மேம்பாலம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ. 56 லட்சம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் 8 அடுக்கு மாடி கொண்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். ரூ. 2.70 கோடி மதிப்பீட்டில் சிந்தாதரிப்பேட்டை மீன் மார்க்கெட் விரைந்து கட்டி முடிக்கப்படும்.

தியாகராய சாலையில் உள்ள வாரிய குடியிருப்பு வளாகத்தில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும். வடக்கு கிரியப்பா சாலை, கங்கை புரம் பகுதிகளில் மறுக்கட்டு மான பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

அண்ணாநகர் 102வது வட்டத்தில் உணவு பொருள் கிடங்கு அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும். அண்ணாநகர் தொகுதியில் புதிதாக 2 நியாய விலைக் கடைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சாரங்களில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பரந்தாமன், ஏ.வெற்றியழகன், எம்.கே.மோகன், எழிலன் நாகநாதன், மேயர் பிரியா,சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.