tamilnadu

img

உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாள்! முதல்வர் அறிவிப்பு

சென்னை, டிச.10- “‘தமிழ்த் தாத்தா’ என்றழைக்கப் படும் உ.வே. சாமிநாத ஐயர் பிறந்த நாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்து பேசிய முதலமைச்சர், உறுப்பினரின் கோரிக்கை ஏற்று, டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் பிறந்த நாள் ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாகக் கொண்டாடப்படும்” என்றார்.  

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு உறுப்பினர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று பிறந்தவர் உ.வே. சாமிநாத ஐயர். அதே ஊரில் தொடக்கக் கல்வியும், இசையும் கற்ற சாமிநாத ஐயர், புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரம் பிள்ளை யிடம் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று 17-ஆவது வயதில் தமிழறிஞர் ஆனார். 1880 முதல் 1903 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி யாற்றினார்.

பின்னர் 1903 முதல் 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணி புரிந்தார். பழந்த மிழ் ஏடுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கவே, அழிந்து மறைந்து போகும் நிலையி லிருந்த பண்டைத் தமிழ் இலக்கி யங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த சாமிநாத ஐயர், 3000-க்கும் அதிகமான ஏட்டுச்  சுவடிகளையும் கையெழுத்து பிரதி களையும் அரும்பாடுபட்டு சேகரித்தவர்.

 சீவக சிந்தாமணியில் துவங்கி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கிய நூல்கள் என 100-க்கும் மேற்பட்ட நூல்களை அச்சிலேற்றியவர்.  இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.