tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதல்வரின் தனிச் செயலர்ஆர்.தினேஷ்குமாரின் தந்தை டி.வி.ரவி மறைவு
கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

சென்னை, மே 13- முதலமைச்சரின் தனிச் செயலாளர் ஆர். தினேஷ்குமாரின் தந்தை டி.வி.  ரவி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளர்  ஆர். தினேஷ்குமாரின் தந்தை டி.வி. ரவி  (வயது 65) அவர்கள் சிறுநீரக பாதிப்பால்  தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் சிகிச்சை பலனின்றி அவரது சொந்த  ஊரான நாமக்கல் மாவட்டம், வெண் ணந்தூரில் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. அவ ரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தையை இழந்து தவிக்கும் முதல மைச்சரின் தனிச் செயலாளர்  திரு ஆர். தினேஷ்குமார் அவர்களுக்கும், அவரது  குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல்  அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை, மே 13- தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி  எடுத்து வரும் நிலையில், பரவலாக மழையும் பெய்து வருகிறது. வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை  மாறுபடுவதால் தமிழகத்தில் செவ் வாய்க்கிழமை (மே 14) தேனி, திண்டுக்  கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்  என்றும் இந்த மழை மேலும் மூன்று நாட் கள் தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி!
சென்னை, மே 13- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பி னர் தனுஷ் நடிகர் சங்க புதிய கட்டட  பணிகளைத் தொடர்வதற்காக சங்கத் தின் வங்கி வைப்பு நிதிக்கு ஒரு கோடி  நிதியுதவியை சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலை வர் பூச்சி எஸ். முருகன் ஆகியோரிடம்  வழங்கினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர், தடையற்ற மின்சாரம் வழங்கல்
தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை, மே 13- குடிநீர் மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்கு வது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். 

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்  லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்து வதால், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. தண்ணீர்  தட்டுப்பாட்டால் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மின் பயன்பாடு, மின் தேவை அதிகரிப்பு காரணமாக, மின்வெட்டு மற்றும் மின் தட்டுப்பாட்டை எதிர் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு  சில இடங்களில் மழை பெய்தாலும் கோடை  வெப்பத்தின் தாக்கம் முழுமையாக குறைந்த பாடில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான குடிநீர், வெப்ப தடுப்பு நடவடிக்கை கள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா  ஆலோசனை மேற்கொண்டார். தடையின்றி மின் விநியோகம் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி கள் பங்கேற்றனர். குடிநீர் வழங்கல், வருவாய்,  பேரிடர் மேலாண்மைத் துறைகளின் செயலாளர் கள், மின்வாரிய தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்  இன்று வெளியீடு!
சென்னை, மே 13- 11-ஆம் வகுப்பு  (பிளஸ் 1) தேர்வு  முடிவுகள், ஏற்கெ னவே அறிவித்தபடி மே 14 செவ்வாய்க் கிழமை காலை 9.30  மணிக்கு வெளியி டப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய  இணைய தளங்களில் அறிந்து கொள்ள லாம்.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்க ளில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம்.

இது தவிர பள்ளி மாணவர்கள், தனித்  தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன்  எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மாணவர்களின் மதிப்பெண் பட்டி யலை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பள்ளித் தலைமை  ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது.

கடந்த மார்ச் 4 முதல் 25 வரை நடை பெற்ற பிளஸ் 1 தேர்வை, தமிழகத்தில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 187 பள்ளி மாண வர்கள், 4 ஆயிரத்து 945 தனித் தேர்வர்  கள் என மொத்தம் 8 லட்சத்து 25 ஆயி ரம் பேர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக் கது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறப்பு வகுப்பு
சென்னை, மே 13- தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு தேர்  வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வைத் தவறவிட்ட மாண வர்களுக்கு ‘தொட ர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் மே 13 திங்கட்  கிழமை முதல் சிறப்பு  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாட வாரியாக ஆசிரியர் வல்லு நர்கள் குழு மூலம் தயாரிக்கப்பட்ட குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும்  வினாத்தாள் மாணவர்களுக்கு வழங் கப்படுகிறது. இந்த சிறப்பு பயிற்சி மையங்கள், முன்னதாக மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.