tamilnadu

img

“சக்கிலியர் வரலாறு”

சாதி வரலாற்றை சாதி அமைப்புக்கு எதிராகத் திருப்புதல்

தமிழ்நாட்டின் வரலாற்று எழுதியலில் மிகவும் இழிவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் குழுமம், சக்கிலியர். இழிதொழில் புரிவோர், விசயநகர ஆட்சியாளர்களுடன் வந்த வந்தேறிகள், தெலுங்கர்கள். இப்படிப் பல கதைகள். 

தோழர் மதிவண்ணன் பத்தாண்டு கால உழைப்பில் கல்வெட்டியல், பண்பாட்டியல் தரவுகளை ஒருங்கு திரட்டி, சக்கிலியர் வரலாற்றைச் சாதி அமைப்புக்கும் அந்த அமைப்பிலிருந்து எழுந்து ஆதிக்கம் செலுத்தி வரும் எண்ணங்களுக்கும் எதிராகத் திருப்பியுள்ளார்.

 அத்துடன் தமிழ்நாட்டு வரலாறெழுதியலுக்கும் பொருள் கோடலுக்கும் மதிப்புவாய்ந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளார். சக்கிலியர் தமிழ் நிலத்தின் தொல்குடியினர்.  கைவினைஞர், வீரக் குழுவினர், மதிப்புடன் வாழ்ந்த பழங்குடியினர். களப்பிரர், வாணர். பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பௌத்த மரபினர். புராணங்களில் அசுரர்களாக உருவகிக்கப்பட்டோர். இப்படியான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி முன்வைத்துள்ளார். விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

 பழைய எண்ணவோட்டங்களைக் கேள்விக்குள்ளாக்கி அவற்றில் உள்ள உள்முரண்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளார். வருங்கால ஆய்வுகள் தோழர் மதிவண்ணன் அவர்களின் எழுத்துகளைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

நூலாசிரியர் ம.மதிவண்ணன், 
விலை : ரூ.350, வெளியீடு : கருப்பு பிரதிகள்