tamilnadu

img

சுனாமி நினைவு தினம்: கடலோரப் பகுதிகளில் அஞ்சலி

சென்னை, டிச.26 - இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் 19 ஆண்டு களுக்கு முன்பு டிசம்பர் 26 அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது

இந்த அழிப்பேரலை தமிழ்நாட் டையும் விட்டுவைக்கவில்லை. சென்னை முதல் குமரி வரை கிழக்கு  கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டுபோனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னை யில் 206 பேரும் பலியானார்கள்.

இந்த சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. 19 ஆண்டு களாக கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக் கொண்டே தான் இருக்கி றது.

‘காலங்கள் கரைந்து போனாலும் கண்ணீர் இன்னும் கரையவில்லையே’ என மக்கள் இன்றும் ஏங்கும் அளவுக்கு உறவுகளை பிரிந்து சென்று  பெருந்துயரம் தந்த சுனாமி எனும் இயற்கை பேரழிவின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (டிச.26) அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, சென்னை முதல் குமரி வரை  கடலோரம் வசிக்கும் கிராம மக்கள் அமைதி பேரணியாக சென்று கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, உயிரிழந் தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடலூர்  தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வட்டாட்சியர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு  மலர் அஞ்சலி செலுத்தினர்.