சென்னை:
பழங்குடி மக்கள் மறுமலர்ச்சி சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன் னேற்ற சங்கத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைத்தவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலுடன் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக பலபோராட்டங் களை முன்னின்று நடத்திய தோழருமான பெருமாள் காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஆழ்ந்த பற்றுடையவர். தோழர் வி.பி.சி, அ.சவுந்தரராசன் ஆகியோரின் அன்பை பெற்றவர் தோழர் பெருமாள். கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக வியாழனன்று (நவ.12) மாலை ஐந்து மணிக்கு மரணமடைந்தார்.சென்னை ஆவடியில் வசித்து வந்த தோழர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஏராளமான போராட்டங்களை முன்நின்று நடத்தி உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந் தார் அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமன்றி பழங் குடி மக்கள் மற்றும் குறவன் என சங்கத்திற்கும் பேரிழப்பாகும்.அவரது மறைவுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் சரவணன், பி.டில்லிபாபு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தமிழ்நாடுகுறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.வி. சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.