tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்.15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தன.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, இன்று சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததையடுத்து, திட்டமிட்டபடி நாளை (ஜன.09) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.