tamilnadu

img

10 ஆயிரம் புத்தகங்கள்; 350 மையங்கள்... ஏங்கெல்சை வாசிக்கும் போக்குவரத்துத்தொழிலாளர்கள்...

சென்னை:
இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து அரங்கம் சார்பில் சனிக்கிழமையன்று வடசென்னை ஏ.பி.அலுவலகத்தில் காணொலி மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாமேதை பிரடெரிக் ஏங்கெல்ஸ்எழுதிய ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ என்ற நூலை  தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் எண்ணிக்கையில் வாங்குகின்றனர். இந்த புத்தகம் குறித்து 350 மையங்களில் வாசிப்பு இயக்கம் நடைபெறுகிறது. 

இதற்கென நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கிற்கு போக்குவரத்து சம்மேளன உதவித் தலைவர் எம்.சந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கருத்துரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.  மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் விளக்கவுரையாற்றி னார். பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர் நாகராஜன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க உதவித்தலைவர் ஏ.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்ற னர்.  சம்மேளன உதவித்தலைவர வீ.பிச்சை நன்றி கூறினார்.