tamilnadu

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சு: 14 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை, பிப்.8- போக்குவரத்து தொழி லாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு  நடத்த தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. 14 பேர் கொண்ட குழு அமைத்து போக்குவரத்து செயலாளர் பணீந்திர ரெட்டி  உத்தரவிட்டுள்ளார். குழு வில் நிதித்துறை கூடுதல்  செயலாளர், போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கள் இடம் பெற்றுள்ளனர்.

போக்குவரத்து தொழி லாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு வார்த்தை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப் படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.

பின்னர் இது தொடர் பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வியில் முடிந்தது. இதனால், கடந்த மாதம் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக் கில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை சங்கங்களுக்கு நீதிமன்றம் பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு எடுத்துக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 19  வரை வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக சென்னை  நீதிமன்றத்தில் தொழிற் சங்கங்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நடை பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலை யில் புதனன்று மாலை 3 மணி  அளவில் மீண்டும் பேச்சு வார்த்தை பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் நாடு அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை யில் உடன்பாடு எட்டப் படாத நிலையில் 15-வது  ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை நடத்தக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு அரசாணையையும் வெளி யிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த  அமைத்த குழுவில் நிதித் துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோர் உள்ளனர். ஊதிய உயர்வு கோரி போக் குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய நிலை யில் இந்த குழு அமைக்கப் பட்டுள்ளது.