tamilnadu

img

பாதுகாப்பற்ற முறையில் உள்ள மின் மாற்றியை இடம் மாற்றிடுக!

கும்பகோணம், ஏப்.4-தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரத்தில் மடத்து தெரு முக்கிய பகுதியாகும். இப்பகுதியில் முக்கிய நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை மற்றும்தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் வங்கி மற்றும் பொது காப்பீட்டு கழகம் அலுவலகம் அருகிலேயே அதிக திறன் கொண்ட மின் மாற்றி எவ்விதபாதுகாப்பும் இன்றி உள்ளது. நெருக்கடியான இந்த இடத்தில் அலுவலகங்கள் செல்வோரும் கடைத்தெரு மற்றும் மருத்துவமனைக்குச் செல்லுபவர்கள் அதன் அருகில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கிறார்கள். ஆனால் அந்தமின்மாற்றி எவ்வித பாதுகாப்பு இல்லாமல் தொடும் தூரத்தில் உள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் மின்சாரம் பாய்ந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்துறை பொறியாளரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கையும் இல்லை. இதனால் மின்மாற்றியை உடனே பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;