சென்னை, செப்.5- போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடு வோருக்கு அபராதம் விதிக்கும் அதிகா ரத்தை, சட்டம் ஒழுங்கு போலீசுக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் வரையிலான அதிகாரி களுக்கும் வழங்கி அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடு வோர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கும் அதிகாரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோ ருக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும் மோட் டார் வாகன ஆய்வாளருக்கும் இந்த அதி காரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், கட்டாயத் தலைக்கவச வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றமானது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வும், அபராதம் விதிக்கவும், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசுக்கும், சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் வரையிலான அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதுதொடர்பாக அரசாணை பிறப்பிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக சட்டம் ஒழுங்கு போலீசா ரும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரையி லான அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிப்பதற்கான அதிகாரத்தை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. சிறப்பு எஸ்.ஐ. என்பவர்கள் போலீசாக இருந்து பதவி உயர்வின் மூலம் எஸ்ஐ ஆக பதவி பெற்றவர்கள் ஆவர்.