சென்னை, ஜன.6- வருகிற 10 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று இதற்கான டோக்கன் ஞாயிறன்று முதல் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு முதல் டோக்கன் விநியோகம் செய்யப்ப டும் என்றும் 10 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
இவை ரேசன் கடைகள் மூலம் பொதுமக் களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படும். முதலில் பொங்கல் பரிசு தொகுப் பிற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ. 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் படும் என அப்போதே கூறப்பட்டது. அதேபோல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித் திருந்தார்.
இதற்கிடையே பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு ஞாயிறன்று முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள் ளது. ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு டோக்கன் விநியோ கம் செய்யப்படும். அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத் தில் பயனாளிகள் ரேஷன் கடை களுக்குச் சென்று பரிசுத் தொகுப் பைப் பெறலாம்.