tamilnadu

img

நீதிமன்றங்களில் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்த பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை

திருவள்ளூர், டிச.10- பெண் வழக்கறிஞர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியாமல், தொழிலை விட்டு வெளியேறும் அவல நிலையை . போக்க மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.  

அதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பெண் வழக்கறி ஞர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிக ளுடன் கூடிய தனி ஓய்வறை அமைக்கப்பட வேண்டும். இளம் ஆண், பெண், வழக்கறிஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்குவதை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும். பெண் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பெண் ஊழியர்களின் குழந்தைகளை பராமரிக்கும் விதமாக குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்.

பாலிய சீண்டல்களிலிருந்து பாதுகாக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் விசாகா கமிட்டிகள் அமைக்க வேண்டும். இளம் பெண் வழக்கறிஞர்கள் அலு வலகம் அமைக்க, சட்ட புத்தகங்கள் வாங்க, வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

நீதிமன்றங்களில் போதிய கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சி.கலைவாணி, மாவட்ட செயலாளர் ஆர்.காளமேகம், நிர்வாகிகள் பி.யக்ஞபிரபா, காஞ்சனா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.