சென்னை, டிச. 28 - உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் (71) சிகிச்சை பலனின்றி வியாழனன்று (டிச.28) காலமானார்.
விஜயகாந்தின் இந்த மறைவு, தேமுதிக தொண்டர்கள், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘மியாட்’ மருத்துவமனையிலிருந்து, சாலிகிராம இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் அதன்பிறகு கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தி லும் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்குத் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வியாழனன்று காலையிலேயே சாலிகிராமம் இல்லத்திற்குச் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு, மா. சுப்பிர மணியன், கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். குடும்ப உறுப்பி னர்களின் அஞ்சலிக்குப் பிறகு, காலை 10.30 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு கோயம்பேடு அலுவலகத்தில் விஜய காந்த் உடல் வைக்கப்பட்டது.
அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள், விஜய காந்தின் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெய லலிதாவின் தோழி வி.கே. சசிகலா, காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், பாஜக தலைவர் அண்ணாமலை, கவி ஞர் வைரமுத்து, நடிகர்கள் பிரபு, கவுண்டமணி, தியாகு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், விஜய் சேதுபதி, சூரி, அர்ஜூன், விக்னேஷ், இயக்குநர்கள் டி. ராஜேந்தர், விக்ரமன், ஏ.ஆர்.முருக தாஸ், பேரரசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என். ரவி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலை வர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, விஜய் வசந்த் எம்.பி., மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் மம்முட்டி, இயக்குநர்கள் பாரதி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தொண்டர்கள், ரசிகர் கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டுள் ளதால், கோயம்பேடு மேம்பாலம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் - தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சென்னை, கோயம்பேடு மேம்பாலம் அருகே அதிகளவு வாகன நெருக்கடி யால் போக்குவரத்து மாற்றம் செய் யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பாடி மேம்பாலம், திருவீதி அம்மன் சர்வீஸ் ரோடு, சாந்திகாலனி வழியாகச் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். \
இதனிடையே, விஜயகாந்த் உடல் வெள்ளியன்று மாலை 4.45 மணி அளவில், கோயம்பேடு தேமுதிக அலு வலக வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது. விஜயகாந்தின் இறுதி நிகழ்ச்சி, முழு அரசு மரியாதை யுடன் நடைபெறும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
விஜயகாந்தின் வாழ்க்கை குறிப்பு
1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று மதுரை திருமங்கலத்தில் கே.என் அழ கர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர் சுவாமி ஆகியோருக்கு மகனாக பிறந்த விஜயகாந்த், எம்.ஜி.ஆர் படங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், நடிகராக வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வந்து, பல்வேறு கஷ்டங்களை அனு பவித்து, 1979 ஆம் ஆண்டு எம்.ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தின் மூலம் நடிக ராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
விஜயராஜ் என்ற தனது பெயரில் ராஜ் என்னும் வார்த்தையை நீக்கி விட்டு, ‘காந்த்’ என்னும் வார்த்தையை இணைத்துக் கொண்ட விஜயகாந்த், 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் மூலம் மக்கள் மத்தியில் புகழ்பெறத் துவங்கினார். 1984-இல் மட்டும் ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ என ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்தார்.
கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்ட இளைஞராக ‘சிவப்பு மல்லி’ படத்தி லும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வராக ‘சாதிக்கொரு நீதி’, ‘அலை ஓசை’ படங்களிலும் விஜயகாந்த் நடித்தது, அவரை மக்களுக்கு நெருக்கமான நடி கராக மாற்றியது. புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்க ளும், வல்லரசு, வாஞ்சிநாதன், ராஜ்ஜி யம், ரமணா போன்ற படங்களும் விஜய காந்த்தை முன்னணி கதாநாயனாக மாற் றின. 2015-ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
1990-ஆம் ஆண்டு, ஜனவரி 31 அன்று தனது 37 வயதில், பிரேமலதாவை விஜய காந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர்.
2005 செப்டம்பர் 14 அன்று மதுரை யில் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் துவங்கிய விஜயகாந்த், 2011-இல் 41 எம்எல்ஏ-க்களுடன் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அளவிற்கு உயர்ந்தார். பின்னர் உடல்நலன் குன்றிய தால், கடந்த சில ஆண்டுகளாக தொடர் மருத்துவச் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையிலேயே டிசம்பர் 28 அன்று காலை காலமானார்.
உதவும் உள்ளம் படைத்த சிறந்த பண்பாளர் விஜயகாந்த்
சிபிஐ(எம்) இரங்கல்
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வியாழனன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த விஜயகாந்த் அவர்கள் தனது கடினமான உழைப்பால் திரைப்படத்துறையில் காலடி வைத்து படிப்படியாக உச்சத்தை எட்டியவர். பல திரைப்படங்களில் மக்கள் வாழ்நிலை முன்னேற்றத்திற்காக முற்போக்கு கருத்துக்களை பேசி நடித்து மக்களின் அன்பைப் பெற்றவர். தனது உழைப்பால் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்தவர். நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர்.
தேமுதிக கட்சியைத் தொடங்கி போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் செயல்பட்டவர். எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றிய காலத்தில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் வலுவாக முன்னெடுத்தவர். மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து முக்கிய பங்காற்றியவர். எளிமையானவர், சிறந்த பண்பாளர், வெளிப்படைத் தன்மையுள்ளவர். அவரது மறைவு தமிழ்நாட்டின் அரசியல் பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை செலுத்துகிறது.
அவரது மறைவால் வேதனையுற்ற அவரது இணையரும், தேமுதிக பொதுச் செயலாளருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தேமுதிகவின் தொண்டர்கள் மற்றும் அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.