சர்வாதிகார எதிர்ப்பு அரசியல் இயக்கமாகத் தொடங்கி, பின்னர் ஒரு சோசலிசப் புரட்சியாக மாறியது கியூபப் புரட்சி.
1953 ஜூலை 26 அன்று மாண்கடா படைத் தளத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு அரசியல் இயக்கம் ஒரு சமூகப் புரட்சியாக மாறியது. ஜூலை 26 இயக்கம் என அழைக்கப்படும் இது, பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான வேலையற்ற இளைஞர்கள், தொழில்துறை மற்றும் பண்ணை தொழிலாளர்கள் குழுவுடன் தொடங்கியது. கியூபாவில் கொடுங்கோலன் பாடிஸ்டா நடத்திய மிருகத்தனமான ஆட்சி, மந்தமான பொருளாதார வளர்ச்சி, வேலையின்மை, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்தியது ஆகியவற்றை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார் பிடல். மறுபுறம், லத்தீன் அமெரிக்காவின் நிலை கண்டு புரட்சிகர சிந்தனையை ஏற்றுக் கொண்டிருந்தார் சேகுவேரா. இந்த இரண்டு புரட்சியாளர்களும் சந்தித்து, பாடிஸ்டாவை எதிர்த்து போர்புரிய திட்டமிட்டனர். அதிலிருந்து 3 வருடங்கள், 6 மாதங்கள் கழித்து கியூபாவில் கொடுங்கோல் ஆட்சி செய்த பாடிஸ்டா வீழ்த்தப்பட்டு 1959 ஜனவரி 1 அன்று புரட்சிகர அரசு அமைந்தது.
கியூபப் புரட்சியும் அதன் தலைவர்களும் உலகெங்கிலும் உள்ள மக்களையும் இயக்கங்களையும் ஊக்கப்படுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றனர். என்றென்றும் வழிகாட்டும் நட்சத்திரமாய் ஜொலிக்கிறது சோசலிச கியூபா.