tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்

தமிழக உழைப்பாளி மக்களின் முன்னணி போராளி, சிபிஎம் மாநில  செயற்குழு உறுப்பினர், சிஐடியு மாநிலத் தலைவர், நான்குமுறை சட்ட மன்ற உறுப்பினர், தோட்ட தொழி லாளர், வழக்கறிஞர், போக்குவரத்து சங்கங்களின் மாநில தலைவர், சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் என  பல்வேறு பொறுப்புகளை திறம்பட  வகித்தவர் தோழர்.ஜே.ஹேமச்சந் திரன். இன்று (08.02.2024)  அவரது 16 ஆவது ஆண்டு நினைவுநாள். 1964-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது தோழர் ஜெ.ஹேமச்சந்திரன் தன்னை அதில் இணைத்துக் கொண்டார்.

அந்த ஆண்டின் இறுதியில் மார்க்சிஸ்ட் கட்சி மீது அன்றைய இந்திய அரசாங்கம் பெரும்  தாக்குதலை தொடுத்தது. ஏராளமான தலை வர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது தோழர் ஜெ.ஹேமச்சந்திரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு கைதியாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சட்டப்படிப்பை சிறையில் இருந்தே தொடர்ந்தார். காவல் துறையின் பாதுகாப்புடன் தேர்வு மையம் சென்று தேர்வு எழுதினார். வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்.

14 மாத சிறை வாசத்திற்கு பின்னர் விடுதலையானார். அதன்பின் மாவட்ட அளவிலும் மாநில, அகில இந்திய  அளவிலும் பல்வேறு தொழிற்சங்க பொறுப்பு களுக்கு தேர்வு செய்யப்பட்டார். 1976 ஆம் ஆண்டு நாடெங்கும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஓராண்டு காலத்திற்கு மேலாக தலைமறைவாக சென்று மாவட்டம் முழுவதும் இயக்க பணிகளை மேற்கொண்டார். மாநில அளவில் பல்வேறு தொழி லாளர் போராட்டங்களுக்கு நேரடியாக தலைமை தாங்கி நடத்தினார். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்தினார்.  சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பினார். முதல்  அமைச்சர்களுடன் இருந்த தொடர்பை  குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக வகுப்புவாதம் குமரி மாவட்டத்தில் தலையெடுத்த போது அதற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னிறுத்தினார். குமரி மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையை நிலைநாட்டவும், வகுப்புவாத மோதலை தவிர்க்க வும் என்னென்ன செய்ய வேண்டுமென்று அவர் வைத்த வாதங்கள் வேணுகோபால் கமிஷன் சிபாரிசுகளில் இடம்பெற்றன. இதனால் கோபமுற்ற வகுப்புவாத சக்திகள் அவருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஏராளமான அவதூறுகளை சுமத்தின.

அவர் சற்றும் அதை பொருட்படுத்தாமல் இறுதிமூச்சு வரையிலும் வகுப்புவாதிகளுக்கு எதிராக சமரசமின்றி போராடினார். சோசலிச அரசு அமைவதின் மூலம் தான் தொழிலாளி வர்க்கத்தின் சமூக பொருளாதார முன்னேற்றமும் விடுதலையும் சாத்தியமாகும் என்றும், அதற்கு மார்க்சிய சித்தாந்தமே சிறந்த ஆயுதம் எனவும் கருதி இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சிறந்த தொழி லாளி வர்க்கப் போராளியாக செயல்பட்டார். அவரது பணிகளை நெஞ்சில் நிறுத்துவோம்.