tamilnadu

img

பொறியியல் படிப்புக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூலை 9- தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை புதனன்று (ஜூலை 10) உயர்க் கல்வித் துறை  அமைச்சர் க.பொன்முடி வெளியிடு கிறார்.

தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழ கத்திற்கு உட்பட்ட கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி  பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறி யியல் கல்லூரிகள் ஆகியவையும் அடங்கும்.

இந்த கல்லூரிகளில் பி.இ., பி டெக் படிப்புகளில் சுமார்  2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் ஒற்றை சாளர முறையில்  இணைய வழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணைய  வழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 6ஆம் தேதி முடி வடைந்தது. இருப்பினும் ஆசிரியர்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜூன் 11ஆம் தேதி வரை கால  அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்புகளில் சேர இது வரை 2 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்து 98,853 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உரிய  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர் களுக்கு ஜூன் 12 ஆம் தேதி சமவாய்ப்பு எண் இணையவழி யில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 13 முதல் 30 ஆம் தேதி  வரை மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரகத்தில் புதனன்று நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இணையதளத்தில், தரவரிசைப் பட்டியலை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.