தூத்துக்குடிக்கு
வேட்பாளரை அறிவிக்க
முடியாத தமாகா
சென்னை, மார்ச் 22- ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகாவுக்கு, 3 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. இதில், இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளரை தமாகா அறிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூ ரில் வேணுகோபாலும், ஈரோட்டில் விஜயகுமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், தூத்துக்குடிக்கு ஆள் இல் லையோ என்னவோ, அந்த தொகுதிக்கு தமாகாவால் இன்னும் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று ஜி.கே.வாசன் சமாளித்துள்ளார்.
விஜயகாந்த் மகன் விருதுநகரில் போட்டி
சென்னை, மார்ச் 22 - அதிமுக கூட்டணியில் 5 தொகுதி களில் போட்டியிடும் தேமுதிக, வேட்பா ளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, மத்திய சென்னையில் பார்த்த சாரதி, திருவள்ளூரில் நல்லதம்பி, கட லூரில் சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவநேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார்.
பாமக வேட்பாளர்கள்
அன்புமணி போட்டியில்லை
சென்னை, மார்ச் 22- மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் பாமகவின் முதற்கட்ட வேட்பா ளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட் டுள்ளது. இதன்படி ஆரணி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கணேஷ் குமார், அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே. பாலு, மயிலாடுதுறையில் ம.க. ஸ்டா லின், கள்ளக்குறிச்சியில் முன்னாள் மாநி லங்களவை உறுப்பினர் தேவதாஸ், திண்டுக்கல்லில் கட்சியின் மாநில பொரு ளாளர் ம. திலகபாமா, தருமபுரியில் சவு மியா அன்புமணி, சேலத்தில் அண்ணா துரை, விழுப்புரத்தில் முரளி சங்கர், காஞ்சிபுரத்தில் (தனி) ஜோதிவெங்க டேசன் ஆகியோர் வேட்பாளராக நிறுத் தப்பட்டுள்ளனர். அன்புமணி போட்டியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.