சென்னை,ஜன.29- தமிழ்நாட்டில் அனுமதி யின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா வில், சட்ட விதிகளுக்கு முரணாக, உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி மீன்வளத்துறை உதவி இயக்குநர் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணை களின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கு கள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் முன்பு விசார ணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ஒன்றிய அர சின் கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டப்படி கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தான் இறால் பண்ணைகளை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளன.
உரிய அனுமதிகளை பெறாமல் இந்த பண்ணை கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த பண்ணை களை மூட உத்தரவிடப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 709 இறால் பண்ணைகள் உள்ளன. அவற்றில் 2 ஆயிரத்து 227 பண்ணைகள் மட்டும் பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின் அனுமதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 134 பண்ணைகள் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதி பதி, அனுமதியின்றி செயல் பட்ட மனுதாரர்களின் இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணை களை மூடுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்திய வர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலக் கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரி களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.