tamilnadu

img

பொது விநியோகத்தை பலப்படுத்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

சென்னை, ஜூலை 18 - பொது விநியோகத்தை பலப்படுத்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக பொதுத் தொழி லாளர் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது விநியோக பணியில் பணி புரியும் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே உள்ளது. அங்காடிகள் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களுக்கு அதீத அபராதம் விதிக்கப்படுகிறது.

ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒருவரே அனைத்து பணிகளையும் செய்ய வேண்டியது உள்ளது. எடை  குறைவாக மூட்டைகளை வழங்குவது, பொருட்களை போதிய அளவில் வழங்காதது, பதவி உயர்வு பெற்ற பின்பும் அங்காடியில் பணிபுரிய நிர்ப்பந்திப்பது என ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.

ஊழியர் பற்றாக்குறையை போக்கா மல் மேலும் மேலும் பணிகளை திணிப்பதால் தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர். 

எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  நிரந்தர தன்மையுள்ள பணியிடங்களை நீக்குவதை கைவிட வேண்டும், 2013-16ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவகால பணி யாளர்களை நிரந்தரம்செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழ னன்று (ஜூலை 18) கோபாலபுரத்தில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 30 உண்ணாநிலை போராட்டம்

சென்னை மண்டல தலைவர் எஸ்.  புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் கே. சண்முகம், துணைத்தலைவர் எஸ். லூர்துசாமி, சென்னை மண்டல நிர்வாகி கள் டி. சாம்பசிவம், என். ரவி உள்ளிட்டோர் பேசினர். இந்தப் போராட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.  குமார், ஊழியர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி ஜூலை 30 அன்று சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெறும் என்றார்.