சென்னை, டிச. 6 - சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) பதிவு கோரும் முறையீட்டு மனுவின் மீது ஆறு வார காலத்தில் முடிவெடுக்கு மாறு தொழிற்சங்கப் பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலைவர் இ. முத்துக்குமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிஐடியு வழக்கு
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் நிறு வனத்தில் பணியாற்றும் பெரும் பாலான தொழிலாளர்கள் இணைந்து ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ அமைத்துள்ள னர். இந்த சங்கத்தைப் பதிவு செய்வதற்காக தொழிற்சங்கப் பதி வாளரிடம் 2024 ஜூலை 26 அன்று பதிவு ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டன.
தொழிலாளர் துறை பதிவு செய்யாமல் காலதாமதம் செய்த தால், 20.9.2024 அன்று சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வலி யுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தொழி லாளர் துறைக்கு எதிராக சிஐடியு வழக்கு தொடுத்தது.
அவகாசம் கேட்ட அரசு
இந்த வழக்கு டிசம்பர் 5 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நான்கு வார காலத்திற்குள் தொழிற் சங்க பதிவு கோரிக்கை மீது முடி வெடுக்குமாறு தொழிற்சங்க பதிவா ளருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தெரி வித்தார். அப்போது, அரசு வழக்கறி ஞர் மேலும் இரண்டு வாரம் கூடுத லாக அவகாசம் கேட்டார். அதன் அடிப்படையில், ஆறு வார காலத்திற் குள் முடிவு காணப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விசாரணையின் போது, சாம்சங் நிர்வாகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கமானது சிஐடியுவுடன் இணைப்பில் இருப்ப தாகவும்; அது அரசியல் சார்புள்ள தொழிற்சங்கம் என்றும்வாதிட்டனர்.
நீதிமன்றம் கேள்வி
சிஐடியு வழக்கறிஞர் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ‘தொழிற்சங்கம் குறித்து இது அந்த வழக்கறிஞரின் கருத்தாக இருக்கலாம்; இது குறித்து இந்த நீதிமன்றம் இப்போது விவாதிக்கவில்லை; அரசியல் அமைப்புச் சட்டம் தொழிற்சங்கம் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக் கிறது’ என்று நீதிபதி கூறினார். மேலும், ‘தொழிற்சங்கம் பதிவு செய்யக்கோரி முறையிட்டால் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்க பதிவுச் சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால், இவ்வளவு காலதாமதம் செய்தது ஏன்?’ என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த வாதத்தின் தொடர்ச்சி யாகவே மேற்கண்ட தீர்ப்பு வழங்கப் பட்டது.
பதிவு எண்ணை வழங்குக!
6 வார காலத்திற்குள் முடி வெடுக்க வேண்டும் என்ற நீதி மன்றத்தின் உத்தரவை சாம்சங் சிஐடியு தொழிற்சங்கம் வரவேற் கிறது. மேலும், வேலை நிறுத்தத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், தொழிற்சங்க பதிவு வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை தமிழக அரசு செய்யும் என்றும் அதன் மீது மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்றும் அமைச்சர்கள், தொழிற்சங்க தலைவர்கள் முன்னி லையில் வாக்குறுதி கொடுத்தனர். இந்த வாக்குறுதி அடிப்படையில், மேலும் காலதாமதம் செய்யாமல் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்து அதற் குரிய பதிவு எண்ணை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.