சென்னை, ஆக.20 -
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு சென்னை நொளம்பூர் வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடை பெற்றது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுத லில் ஒற்றையர் மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண் கலப் பதக்கங்களை வென்றிருந்தார் இந்திய வீராங்கனை மனு பாக்கர். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட் டது. இதற்காக சென்னை வந்த அவ ருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த னர்.
பிறகு, வேலம்மாள் பள்ளியில் பயி லும் மாணவர்கள் சார்பில் மனு பாக்க ருக்கு 2 கோடியே 7 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாணவர் களுடன் மனு பாக்கர் உரையாடினார்.
அப்போது, “நான் பதக்கம் வென்றதற்காக பிரதமர் அழைத்து பாராட்டினார். அடுத்தடுத்த பயணங்க ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அது எனக்கு மிகவும் பெருமையான தருணமாக இருந்தது. நான் வெள்ளிப் பதக்கம் வெல்வேன் என எதிர் பார்த்தேன். ஆனால் வெண்கலம் தான் கிடைத்தது. சிறிய புள்ளி அளவில் தான் வெள்ளிப் பதக்கத்தை தவற விட்டேன். இருப்பினும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் கல்வியையும் விட்டுக் கொடுக்கவில்லை, விளையாட்டை யும் விட்டுக் கொடுக்கவில்லை. நீங்க ளும் கல்வி மற்றும் விளையாட்டை சரிசமமாக கையாள வேண்டும். எனது பெற்றோர், நான் கல்வி பயில்வதை எனது மதிப்பெண் அட்டை மூலம் கண்காணித்து கொண்டே இருப்பார்கள். கல்விக்கும், விளையாட்டுக்கும் சேர்ந்து முக்கியத் துவம் கொடுக்கச் செய்தார்கள்.
நான் பள்ளியில் படித்துக் கொண்டி ருந்த போது துப்பாக்கிச் சுடுதல் மீது ஆர்வம் வந்தது. இதனால், மிக இளம் வயதிலேயே தேசிய அணியில் இடம் கிடைத்தது. என் உடல் வலிமையை கொண்டு குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுக்களில் கவனம் செலுத்தி வந்தேன். ஆனால், துப்பாக் கிச் சுடுதல் போட்டியில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதுதான் எனது முதல்படி.
விளையாட்டு உலகில் மற்றொரு வரை பார்த்து காப்பி அடிக்க வேண்டாம். மற்றொருவரைப் போல வரவேண்டும் என்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மற்றவர் களை முன் பார்த்து உத்வேகம் கொள்ளுங்கள். அதன்மூலம் உங்க ளின் தனி அடையாளத்தை நிரூபி யுங்கள். பெண்கள் நம் நாட்டின் 50 விழுக்காடு மக்கள் தொகையை உரு வாக்குகிறார்கள். பெண்கள் சமூ கத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவி ஒருவரின் கோரிக்கையை ஏற்று, ‘தேகா தேனு பெஹ்லி பெஹ்லி பார் வெ’ என்ற இந்தி பாடலை பாடினார். அதைத் தொ டர்ந்து ‘காலா சேஸ்மா’ என்ற இந்தி பாடலுக்கு மாணவ-மாணவியருடன் மனு பாக்கர் நடனம் ஆடினார்.