சென்னை, மார்ச் 5- வருவாயை அதிகரிக்கும் வகை யில் மெட்ரோ நிலையங்களுக்கு அரு கில் மினி மால் (வணிக வளாகம்) பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அலுவலக கட்டிடங்களையும் உரு வாக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் எளி தாகவும், விரைவாகவும் தங்களின் பய ணத்தை அமைத்துக் கொள்ள பெரும் பாலும் மெட்ரோ சேவையை தேர்ந் தெடுக்கின்றனர்.
பயணிகளுக்கு நம்ப கத்தன்மையான மற்றும் பாதுகாப் பான போக்குவரத்து வசதியை மெட்ரோ நிர்வாகம் அளித்து வருகிறது. தினசரி லட்சக்கணக்கா னோர் பயணம் மேற்கொண்டு வரும் மெட்ரோ ரயில், நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப அதிகாரிகள் அதன் வடிவமைப்புகளில் மாற்றம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் தொடங்குவதற்கு முன்பு டோக்கன் சிஸ்டம் முறையில் டிக்கெட் வழங்கியதை மாற்றி தற்போது வாட்ஸ் அப் மூலம் வழங்குகிறது.
இதுதவிர, மாதாந்திர பயண அட்டை விற்பனை அதி கரித்தல், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை, பயணிகளுக்கு பல்வேறு சலுகை என புதிய புதிய விளம்பரங்கள் வாயிலாக தற்போது தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டங் களை வகுத்து செயல்படுத்தி வரு கிறது. அந்த வகையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருவாயை அதிகரிக்கவும் மெட்ரோ நிலையங்களுக்கு அருகே சிறிய அளவிலான மினி மால், சிறிய வணிக வளாகம் அல்லது பொழுது போக்கு இடங்கள், கட்டி அதனை வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, மெட்ரோவின் முதல் கட்ட திட்டத்தில் சில நிலையங்களில் கடைகள், உணவகங்களுக்கு சிறிய கடைகள் கட்டி மெட்ரோ நிர்வாகம் வாடகைக்கு விட்டுள்ளது.
இந்நிலை யில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் இந்த திட்டத்தை சாத்தியப்படுத்த மெட்ரோ தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெட்ரோ கட்டம் 1 திட்டத்தில் செயல்படுத்தி யது போல், இந்த முறை நிர்வாகத் தின் சார்பில் ரயில் நிலையங்க ளுக்கு அருகிலேயே பல மாடிக் கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப் பாக, முதல் கட்டத்தில் அரும்பாக்கம், நேரு பூங்கா, சைதாப்பேட்டை உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்க ளில் தற்போது இடங்களை கண்டறிந் துள்ளோம். இந்த இடத்தில் விரை வில் கட்டுமான பணிகளையும் தொடங்க உள்ளோம்.
9 மாடி கோபுரம் கட்டத்திட்டம்
அதாவது, நேரு பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 5,264 சதுர மீட்டர் பரப்பளவில் 9 தளங்கள் கொண்ட கோபுரம் கட்டவும், சைதாப் பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதைக்கும்மேல் 2 மாடி கட்டிடம் கட்டவும், அரும்பாக்கம் நிலையத்தில் 7 மாடி கட்டிடம் கட்ட வும் திட்டமிட்டுள்ளோம். இந்த கட்டடங்களில் இயற்கையான சூழ்நிலை மற்றும் தோட்டக்கலை பணிகளையும் உருவாக்க உள்ளோம். மேலும், கேமிங் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய மினிமால் அல்லது பொழுதுபோக்கு மையம், வணிக வளாகம் அமைக்க வும் ஆலோசனை நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தம் இப்போது மதிப்பீட்டில் உள்ளதால் விரைவில் திட்டத்தை இறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.