மழை வெள்ளத்தில் சேதமடைந்த பள்ளி, கல்லூரி மற்றும் அரசு சான்றிதழ்களை பெறுவதற்கான சிறப்பு முகாம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும், சென்னையில் நாளையும் நடைபெறுகிறது.
மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சேதமடைந்த குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை பெறுவதற்கான சிறப்பு முகாம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாம், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் செயல்படும் 46 பகுதி அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.