மெட்ரோவில் கூடுதல் பெட்டிகள் இணைக்க
கோரிக்கை சென்னை, ஏப். 10- சென்னை மெட்ரோ ரயில் களில் அலுவலக நேரங்க ளில் அதிக கூட்டம் காணப் படுவதால், கூடுதல் பெட்டி கள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் இயக்கப் பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைக்கு பயணிகள் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது சென்னையில், இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில்கள் தினமும் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் நான்கு பெட்டிகளுடன் இயக்கப் பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணி கள் நடைபெற்று வருகின் றன. இதில் மூன்று வழித்தடங் களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் அலுவலக நேரங்களில் அதிக கூட்டம் காணப்படுவதால், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். வெயிலின் தாக்கம், மின்சார ரயில்களின் சேவை யில் அவ்வப் போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் சாலை போக்குவரத்து நெரிசலின் காரணமாக, மெட்ரோ ரயில்களை பெரும்பாலான மக்கள் தேர்வு செய்கிறார்கள். சில நேரங்களில் மெட்ரோ ரயில் களில் நிற்க இடமே இல்லாத நிலை ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்க ளின் நடைமேடைகள் பெரி தாக உள்ளதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.