tamilnadu

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை,மார்ச் 5- சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற க. பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதனால் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியானது. அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டப்பேரவைச் செயலகம் மேற்கொண்டது. இந்நிலையில், திருக்கோவி லூர் தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணை யத்துக்கு சட்டப்பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.