tamilnadu

img

கலாஷேத்ரா முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது

கலாஷேத்ராவில் பாலியல் புகார் தெரிவித்த மாணவர்களை நிர்வாகம் தனித்தனியாக அழைத்து அச்சுறுத்த வருகிறது. புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம், அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இதனை கண்டித்து இன்று காலை கலாஷேத்ரா முன்பு போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவர்களை கலாஷேத்ரா நிர்வாகம் மிரட்டுவதை கைவிட வேணடும்,  நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவினரின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமினில் வராமல் தடுக்க வேண்டும், குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி  கலாஷேத்ரா நோக்கி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். 
இவர்களை காவல்துறையினர் தடுத்து அராஜகமாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது